தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கல்பிட்டி என்ற இடத்தின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவும் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கல்பிட்டி அருகே தான் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் மீனவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கையின் பத்தாலம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம், தொண்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 4 நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)