Read in English
This Article is From Oct 30, 2018

கோவையில் பன்றி காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் உயிரிழப்பு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Advertisement
Tamil Nadu

டெங்கு காய்ச்சல் சந்தேகத்தின்பேரில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

Coimbatore:

கோவையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 8 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

கோவையில் பொள்ளாச்சி அருகேயுள்ள சமாதூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். 8 வயதான அவர், டெங்கு பாதிப்பு அறிகுறிகளுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்தனர். இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் சிறுவனின் உயிர் பிரிந்தது. இதேபோன்று டெங்கு பாதிப்பு அறிகுறிகளுடன் 2 பேருக்கும், பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement