Read in English
This Article is From Sep 21, 2018

நியூயார்க்கில் 8வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்கா நியூயார்க் மாகாணத்திற்கு அருகில் உள்ள சிரக்யூஸ் பகுதியில் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisement
உலகம்

நியூயார்க்கில் 8வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்கா நியூயார்க் மாகாணத்திற்கு அருகில் உள்ள சிரக்யூஸ் பகுதியில் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணிக்கு, சிரக்யூஸ் பகுதியில் நடைப்பெற்ற தனிநபர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக சிரக்யூஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை காவல் துறையினர் வெளியிடவில்லை. இதனால், சிரக்யூஸ் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது என்று செய்தி இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement