Read in English
This Article is From Dec 21, 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம்: உத்தர பிரதேசத்தில் 9 பேர் உயிரிழப்பு!

எனினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு துப்பாக்கி தோட்டாக்களை கூட பயன்படுத்தவில்லை என உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

கோரக்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு போலீஸ்காரர் போராட்டக்காரர்கள் மீது கல் வீசுகிறார்.

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதோடு மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

எனினும், இதுதொடர்பாக பேசிய தலைமை காவல் அதிகாரி ஓ.பி.சிங் கூறும்போது, உயிரிழந்தவர்கள் யாரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகவில்லை. எனினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு துப்பாக்கி தோட்டாக்களை கூட பயன்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு போலீசார் கூறும்போது, அப்படி ஏதேனும், துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், அது போராட்டகர்களே நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவலில், பிஜ்னோரில் 2 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பல், ஃபிரோசாபாத், மீரட் மற்றும் கான்பூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்களில் 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும் காயமடைந்துள்ளனர்.

Advertisement

முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே, திரண்ட பெரும் கூட்டத்தினர், போலீசாரை நோக்கி கல் வீச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து, தடியடி நடத்தி கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

Advertisement

இஸ்லாமியர்களின் தொழுகைக்கு முன்னதாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட போதிலும் இந்த வன்முறை ஏற்பட்டது. 

குடியுரிமை திருத்தச் சட்டமானது வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அசாமில் 1985-ல் ஏற்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்வதாகவும், சட்ட ரீதியாக அசாமுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்வதாக கூறி போராட்டம் நடைபெறுகிறது.

Advertisement

மற்ற இடங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியுரிமை சட்ட திருத்தம் எதிரானது என்றும், மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி போராட்டங்கள் நடக்கின்றன. 

நேற்றும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து உத்தரபிரதேச காவல்துறை தலைவர் ஓ.பி. சிங், 'போராட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் வந்து வன்முறையில் ஈடுபட்டதாக எங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம். மொபைல் போன்கள், அழைப்புகள் உள்ளிட்டவை சோதனை செய்யப்படுகின்றன.' என்றார். 

Advertisement