Read in English
This Article is From Aug 08, 2018

9 வயதுச் சிறுவனுக்கு 3 மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் எனப் புகார்!

புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, 3 சிறுவர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது

Advertisement
நகரங்கள்
New Delhi:

புது டெல்லியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9 வயதுச் சிறுவனுக்கு, அவனின் பள்ளியைச் சேர்ந்த 3 மூத்த சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர் என்று போலீஸ் தகவல் கூறியுள்ளது.

இந்த சம்பவம் ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தாயாரிடம் நடந்த விஷயத்தைப் பற்றி தெரிவித்துள்ளான். இதையடுத்து, விவேக் விஹார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவன், தன்னை மூன்று மூத்த சிறுவர்கள் அநாகரிகமாக தொட்டதாக எங்களிடம் புகார் கொடுத்துள்ளான் என்று காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

Advertisement

புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, 3 சிறுவர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement