கொரோனாவால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் 98 வயது மூதாட்டி ஒருவர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டேபின் ஷா என்ற 98 வயது பாட்டி, ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமையன்று கொரோனா அறிகுறிகள் அதிகம் தென்பட்டுள்ளன.
தொடர் இருமல், மூச்சுத் தவிப்பால் அவதிப்பட்ட அவர் டண்டீயில் உள்ள நைன்வெல்ஸ் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் பாட்டி டேபின் குணம் அடையத் தொடங்கினார். அவரைப் பார்க்க அவரது செல்ல நாய்களும் மருத்துவமனைக்கு வந்து விட்டன. இந்த நிலையில் கடந்த திங்களன்று அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் ஸ்காட்லாந்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்நாட்டின் பிரதமர் நிகோலா ஸ்டர்கியான் கூறுகையில், 'கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றித்தான் நாம் அதிகம் பேசி வருகிறோம். ஆனால், குணம் அடைந்தவர்களையும் நாம் பார்க்க வேண்டும். டேபினுக்கு வாழ்த்துக்கள்.
98 வயதான அவர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்துள்ளார். இந்த துயரமான நேரத்தில், டேபின் குணம் அடைந்திருப்பது நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது' என்றார்.
டேபின் கூறுகையில், 'மருத்துவமனையில் இருந்தவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். இந்த கொரோனா பிரச்னை எல்லாம் முடிந்த பின்னர் நான் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பேன்' என்று உற்சாகத்துடன் கூறினார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)