বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 25, 2019

கார் விபத்து நடந்ததால் பச்சிளம் குழந்தை, பெற்றோர் உயிர் தப்பிய அதிசயம்! 13Sec வீடியோ!!

விபத்து நடந்தால் உயிர்கள் போகும் என்றுதான் நாம் கேள்விப் பட்டிருப்போம். சில சமயம் நடக்கும் விபத்துகள் உயிரைக் காப்பற்றவும் செய்து விடுகின்றன. அவ்வாறான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Advertisement
விசித்திரம் Edited by

கார்கள் மோதிக் கொள்ளும் கோரக்காட்சி.

2 கார்கள் விபத்துக்குள்ளானதால் பச்சிளம் குழந்தை மற்றும் அதன் பெற்றோர் உயிர் தப்பினர். இந்த அதிசய சம்பவம் அடங்கிய திகிலூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் செவ்வாயன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு தனது குழந்தையை ட்ராலியில் வைத்துக் கொண்டு பெற்றோர் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தனர். க்ரீன் சிக்னல் விழுந்ததும், மிகுந்த கவனத்துடன் அக்கம் பக்கம் பார்த்த அவர்கள் மெதுவாக குழந்தையை அழைத்துச் சென்றனர்.

அப்போது விதிகளை மீறி வேகமாக வந்த கார் ஒன்று, சாலையை கடந்து கொண்டிருந்த 3 பேர் மீது மோத முயன்றது. அப்போது, இடதுபுறமாக சரியான திசையில் வந்த மற்றொரு கார், விதிமீறிச் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
 

வீடியோ காட்சி:


இந்த விபத்து நடந்திருக்காவிட்டால் பச்சிளம் குழந்தையும், அதன்பெற்றோரும் சமாதி ஆகியிருப்பார்கள் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

Advertisement

இந்த திகிலூட்டும் 13 வினாடி வீடியோதான் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. சில சமயங்களில் விபத்து ஏற்படுவதும் நல்லதில் போய் முடிகின்றன. வீடியோவை பார்த்து All is Well என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். 

Advertisement