Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 12, 2018

திருச்சியிலிருந்து புறப்பட்ட விமானம் சுவரில் மோதி விபத்து..!

இன்று அதிகாலை திருச்சியிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது

Advertisement
இந்தியா

அதிகாலை 1:19 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது

Chennai:

இன்று அதிகாலை திருச்சியிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. விமானத்துக்கு உள்ளே இருந்த 136 பயணிகளும் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை 1:19 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை அடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மும்பைக்கு அனுப்பப்பட்டது. மும்பையில் தரையிரங்கிய விமானம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், விமானத்தில் லேசான பாதிப்புகள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், திருச்சியிலிருந்து பயணிகள் வேறொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தை இயக்கிய பைலட் மற்றும் கோ-பைலடிடம், விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்துக் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘விமானம், தரையிலிருந்து அந்தரத்தில் டேக்-ஆஃப் ஆகும்போது, அதன் இரு சக்கரங்கள் மட்டும் அருகிலிருந்து சுவரில் மோதியுள்ளது. பழுதான விமானப் பாகங்கள் சீக்கிரமே மாற்றப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்னொரு அதிகாரி, ‘விமானத்துக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டது. எனவே, அதை மும்பைக்கு நாங்கள் அனுப்பி விட்டோம்’ என்று கூறியுள்ளார். 

Advertisement