বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 08, 2019

குடும்பத்துடன் நீர் அருந்தும் புலி: உங்களை உற்சாகமாக்கும் இந்த வீடியோ

புலி உணவில்லாமல் இரண்டு வாரங்ள் வரை வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும்.

Advertisement
விசித்திரம் Translated By

ஒருவர் இந்த வீடியோவை இன்றைய நாளின் ட்ரீட் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாளில் நெட்டிசன்களுக்கு  மகிழ்ச்சி தரும் வீடியோ ஒன்றினை வழங்கியுள்ளார் இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா. அந்த வீடியோவில் புலியின் குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக ஒரு குட்டையில் நீர் அருந்துவதை பார்க்கலாம். இந்த வீடியோ பெஞ்ச் மற்றும் மத்திய இந்திய புலி நிலப்பரப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த புலி பிரபலமான வங்காள புலியான ‘கொலர்வாலி'. ஜனவரி மாதம் இந்த புலி 4 குட்டிகளை பெற்றது. இந்த வீடியோவில் 3 குட்டிகளுடன் புலி அருந்துவதை பார்க்க முடிகிறது. 

புலி உணவில்லாமல் இரண்டு வாரங்ள் வரை வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும்.

Advertisement

இந்த புலிக்குடும்பத்தின் வீடியோ இரண்டு மணிநேரத்திற்கு முன்பு ஆன்லைனில் பகிரப்பட்டது. அதற்குள் 3,000 பேர் இதை பார்த்துள்ளனர். ஒருவர் இந்த வீடியோவை இன்றைய நாளின் ட்ரீட் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய இந்திய புலி நிலப்பரப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மற்றும் ஆந்திராவின் ஒரு பகுதி முழுவதும் பரவியுள்ளது. 13 ஆண்டுகளில் 29 குட்டிகளை பெற்றதன் மூலம் உலக சாதனை படைந்துள்ளது இந்த கொலர்வாலி புலி.

Advertisement
Advertisement