Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 28, 2018

பல முறை பல்டியடித்த பின்னர் பெண்ணைத் தாக்கிய கார்… உ.பி-யில் கோர சம்பவம்!

இந்த கோர விபத்தில் தாக்குதலுக்கு உள்ளானப் பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்

Advertisement
நகரங்கள்

விபத்தில் காருக்கு உள்ளே இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது

Highlights

  • உ.பி முசாபர்நகரில் இந்த விபத்து நடந்துள்ளது
  • சாலை அருகிலிருக்கும் சிசிடிவி-யில் விபத்து பதிவாகியுள்ளது
  • டிரைவர் களைப்படைந்துள்ளதால் விபத்து நடந்துள்ளது, போலீஸ்
Muzaffarnagar:

உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில், நடந்த ஒரு கோர கார் விபத்தில், 60 வயது நிரம்பிய பெண் கொல்லப்பட்டுள்ளார்.

முசாபர்நகரில், அதிகாலையில் ஒரு வயதானப் பெண், நெடுஞ்சாலை ஒன்றுக்குப் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு எதிரில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று நிலை தடுமாறிய கார், சாலையின் ஓரத்தில் மோதுகிறது. அதிவேகத்தில் வந்த கார், சாலையோரத்தில் மோதியவுடன், அந்தரத்திலேயே பலமுறை பல்டியடிக்கிறது. தொடர்ந்து, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த வயதான பெண் மீது கார் விழுந்து நிற்கிறது. இந்த சம்பவம் அனைத்தும் சாலை அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் தாக்குதலுக்கு உள்ளானப் பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். வாகனத்தில் வந்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவர் துறை தரப்பு, ‘காரை ஒட்டி வந்த டிரைவர், களைப்படைந்துள்ளார். அப்போது வாகனம் சாலையிலிருந்த டிவைடரில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஹரித்வார் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. காருக்கு உள்ளே இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement