Read in English
This Article is From Oct 29, 2018

சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு எதிராக புகார் கொடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு..!

உச்ச நீதிமன்றத்தில் சதீஷ் சனா என்கின்ற அந்த தொழிலதிபர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement
இந்தியா

சதீஷ் சனாவை ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது

New Delhi:

சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச புகார் கொடுத்த ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளளார்.

உச்ச நீதிமன்றத்தில் சதீஷ் சனா என்கின்ற அந்த தொழிலதிபர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சிபிஐ அமைப்புக்கு அளித்த புகாரில், ‘சிபிஐ என்னை விசாரித்த வந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அஸ்தானாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். டிசம்பர் 2017-லிருந்து 10 தவனையாக லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது' என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தான் அஸ்தானா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

Advertisement