Read in English
This Article is From Oct 05, 2018

விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி; வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட்!

இதில் 22 பேர் கொண்ட தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அதில் ஒருவர் தான், அடபாட் குஸ்ரான்

Advertisement
இந்தியா

பாங்காக்கிலிருந்து 189 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் புறப்பட்டது

Varanasi:

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து, ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று டெல்லிக்கு புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 22 பேர் கொண்ட தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அதில் ஒருவர் தான், அடபாட் குஸ்ரான். 53 வயதான அவருக்கு, விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அவரின் நிலைமை குறித்து விமானக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடபாட்டுடன் அவரது குடும்பத்தினரும் இருந்துள்ளனர். ஸ்பைஸ் ஜெட் விமானக் குழு, நிலைமை குறித்து வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இதையடுத்து, விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கியவுடன், அடபாட், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது. தாய்லாந்து தூதரகத்திடம் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement