Read in English
This Article is From Sep 17, 2018

திருப்பூரில் பெரியார் சிலை சேதம்… தொடரும் பதற்றம்!

பெரியார் சிலை மீது காலணிகளை வைத்து அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு Posted by

திருப்பூரில் உள்ள பெரியார் சிலை இன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது.

பெரியார் சிலை மீது காலணிகளை வைத்து அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இன்று பெரியாரின் 140வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெரியார் சிலைக்கும், பெரியார் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் சிலர், பெரியார் சிலையைச் சேதப்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement

இன்று காலை, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் இருக்கும் பெரியார் சிலை மீது ஒருவர் காலணி வீசினார். அப்போது அருகில் இருந்தவர்களை அவரைத் தாக்கி காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் திருப்பூரிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement