Read in English
This Article is From Sep 04, 2018

பாஜக-வுக்கு எதிராக கோஷமிட்ட பெண்ணுக்குப் பிணை!

பாஜக-வுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் கோஷம் எழுப்பிய மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு ,
Tuticorin:

பாஜக-வுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் கோஷம் எழுப்பிய மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

லூயிஸ் சோஃபியா என்கின்ற 28 வயது ஆராய்ச்சி மாணவியும் தமிழிசையும் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் விமானத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது சோஃபியா, ‘மோடி- ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஒழிக’ என்று கோஷம் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் தூத்துக்குடியில் தரையிறங்கியவுடன் சோஃபியா கைது செய்யப்பட்டுள்ளார். 

விமானம் தரையிறங்கிய பின்னர் தமிழிசை பேசும் ஒரு வீடியோ பதிவாகியுள்ளது. அதில் அவர், ‘இது ஒன்றும் பொது இடம் அல்ல. அவர் எப்படி கோஷம் எழுப்பலாம்? அவருக்கு சில அடிப்படைவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம். அவர் சாதாரண பயணி போல தெரியவில்லை. நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன்’ என்று கோபமாக பேசுகிறார். 

இதையடுத்து போலீஸ் சோஃபியாவை கைது செய்தது. அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல சோஃபியாவின் தந்தை சாமி, தமிழிசைக்கு எதிராக ஒரு புகார் அளித்துள்ளார். ஆனால், அது வழக்காக பதிவு செய்யப்படவில்லை. 

சோஃபியா, இதற்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராகவும் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

கைதுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் சோஃபியா, ‘நான் தமிழிசை சௌந்தரராஜனுடன் விமானத்தில் சென்று கொண்டிருக்கிறேன். இப்போது, ‘மோடி - ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஒழிக’ என்ற கத்தினால் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்படுவேனா?’ என்று பதிவிட்டார்.

இது குறித்து சாமி, ‘நானும் என் மனைவியும் என் மகள் சோஃபியாவுடன் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றோம். நாங்கள் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இறங்கியபோது, பலர் என் மகளை சூழ்ந்து கொண்டு கூச்சல் எழுப்பினர்’ என்றுள்ளார். இதையடுத்து, மூவரும் பாதுகாப்புக்காக தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சாமியின் குற்றச்சாட்டு குறித்து தமிழிசை, ‘எங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் நடந்த சம்பவம் குறித்து எரிச்சலடைந்திருந்தனர்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சோஃபியாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement