Read in English
This Article is From Nov 27, 2018

'ஆம் ஆத்மி கட்சியல்ல; அரசியல் புரட்சி' - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

கடந்த 2012-ல் இதே நாளில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. 2013 டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது

Advertisement
இந்தியா

ஆம் ஆத்மி கட்சியின் 6-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

New Delhi:

ஆம் ஆத்மி கட்சியல்ல. அது அரசியல் புரட்சி என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதையொட்டி, அக்கட்சியின் சார்பில் நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கட்சியின் ஆண்டு விழா குறித்து டெல்லி முதல்வரும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது-

6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆம் ஆத்மி கட்சி தனது பயணத்தை தொடர்ந்தது. இந்த அரசியல் புரட்சி, நாட்டில் நடைபெறும் ஊழல், வகுப்புவாதம், சாதியம் ஆகியவற்றை கடந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு லட்சக்கணக்கானோர் சுயநலமின்றி உழைத்து வருகின்றனர். இவ்வாறு கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

6- ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. 2013-ல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அக்கட்சி ஆட்சியை பிடித்தது.

Advertisement