Kodaikanal:
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கொடைக்கானலைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், தனக்குக் கீழ் பணி புரியும் எஸ்.ஐ ஒருவரை, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றுள்ளதாக காவல் துறை தரப்பு கூறியுள்ளது.
இன்ஸ்பெக்டர் திட்டியதால், மன உளைச்சலுக்கு உள்ளான எஸ்.ஐ, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நோட்டீஸ் போர்டில், இன்ஸ்பெக்டர் குறித்து எழுதியுள்ளார். பின்னர், பக்கத்திலிருந்த அறையில் தூக்குப் போட்டுக் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், நோட்டீஸ் போர்டில் எஸ்.ஐ எழுதிய குறிப்பைப் பார்த்த சக காவலர்கள், தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ-யை மீட்டுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
COMMENTS
Advertisement