This Article is From Aug 01, 2018

கோவையில் சொகுசு கார் மோதி விபத்து… 6 பேர் பலி எனத் தகவல்!

கோவையில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியதால், 6 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் சொகுசு கார் மோதி விபத்து… 6 பேர் பலி எனத் தகவல்!

கோவையில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியதால், 6 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பொள்ளாச்சி சாலையில், பேருந்துக்காக சாலையோரம் மக்கள் காத்திருந்துள்ளனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீதும் அருகிலிருந்த மக்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் 6 பேர் இறந்துவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவம் நடந்ததை அடுத்து, சொகுசு காரை ஒட்டி வந்தவரை காரிலிருந்து வெளியே இழுத்து பார்த்துள்ளனர் மக்கள். அவர் மது போதையில் இருந்துள்ளதை கண்டு மக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் போலீஸ் அவரை மீட்டுச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.

.