This Article is From Apr 20, 2019

பீகாரில் 11-ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீச்சு

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. 11 வது வகுப்பு படிக்கும் பெண் பாகல்பூரில் தன் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

பீகாரில் 11-ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பீகாரில் 17 வயது பெண் மீது ஆசிட் வீச்சு
  • இந்த சம்பவம் அந்தப் பெண்ணின் வீட்டிலேயே நடந்துள்ளது
  • முதன்மைக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்
Bhagalpur, Bihar:

பீகாரில் 17 வயது பெண்ணை வன்புணர்வு செய்யும் முயற்சி தோல்வியடைந்ததால், அவள் மீது ஆசிட் வீசியதால் மோசமாக காயமடைந்தார். அந்தபெண்ணின் தாய் துப்பாக்கியைக் காட்டிய 4 குற்றவாளிகளை மிரட்டியுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. 11 வது வகுப்பு படிக்கும் பெண்  பாகல்பூரில் தன் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். 

குற்றவாளியான பிரின்ஸ் தன் நண்பர்கள் மூவருடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவள் அம்மாவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். அந்த பெண் மறுத்து போராடியுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் மீது ஆசிட்டை வீசி சென்றதாக துணை ஆணையர் ரூப் ரஞ்சன் ஹார்கோவ் தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

.