Read in English
This Article is From Oct 23, 2018

சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட மலையாள திரைப்பட சங்கத்திலிருந்து வெளியேறினார் நடிகர் திலீப்

ராஜினாமா செய்தது தொடர்பாக கடந்த 10-ம் தேதி எழுதிய கடிதம் ஒன்றை திலீப் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்

Advertisement
Kerala

திலீபை விலகும்படி கோரவில்லை என்று மலையாள திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது.

Thiruvananthapuram:

நடிகை ஒருவரை கடத்தி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீபுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து மலையாள திரைப்பட சங்கத்தில் நீடித்து வந்தார்.

அவரை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏதும் எடுக்காமல் மலையாள திரைப்பட சங்கம் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு நடிகைகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திரைப்பட சங்கத்தில் இருந்து விலகுவதாக நடிகர் திலீப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 10-ம்தேதியன்று அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் ஒன்றை தற்போது அவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த கடிதத்தில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திலீபின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மலையாள திரைப்பட சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த விவகாரத்தில் ஓர் முக்கிய திருப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

Advertisement
Advertisement