This Article is From Jan 23, 2019

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

கஜா புயல் பாதிப்பின்போது சிறப்பாக செயல்பட்டதற்காக மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

Advertisement
தமிழ்நாடு Posted by

மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். கஜா புயலின்போது நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக நிர்வாகிகளை ரஜினி வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டன.

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளும் கஜா புயல் பாதிப்பின்போது நிவாரண பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட செயலாளர் நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். 

சமீபகாலமாக ரஜினி படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அரசியல் பணிகளை துவக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 

Advertisement
Advertisement