This Article is From Oct 30, 2018

செல்ஃபி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டார் சிவக்குமார்!

என் செயலுக்கு உளப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முகநூல் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்

செல்ஃபி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டார் சிவக்குமார்!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வைப் பற்றி அறிந்த ரசிகர்கள் நடிகர் சிவக்குமாரைக் காண, பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். திறப்பு விழாவுக்காக உள்ளே சிரித்த முகமாக வந்தார் சிவக்குமார்.

அங்கு ஒரு ரசிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் கண்டதும், திடீரென அவரது மொபைலை தட்டிவிட்டார். இந்த வீடியோ நேற்றிலிருந்து இருந்து இணையம் எங்கும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சிவக்குமார், ‘ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்கு உளப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று முகநூல் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

.