This Article is From Apr 22, 2020

ஊரடங்கு நேரத்தில் எம்எல்ஏ ரோஜாவுக்கு வரிசையாக நின்று மலர் தூவிய மக்கள்… சர்ச்சையாகும் வீடியோ!

கிராமத்துக்கு வருகை தந்த ரோஜாவுக்கு, மக்கள் வரிசையாக நின்று பாதங்களில் மலர் தூவி வரவேற்றுள்ளனர்

Advertisement
தெற்கு Written by

ஊரடங்கு நேரத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூடியதற்கும், இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நடிகை ரோஜா, ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் முக்கிய நிர்வாகி. சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், தொகுதிக்கு உட்பட்ட இடத்திற்குச் சென்றபோது நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் புதிய போர்வெல் ஒன்றை ரோஜா திறந்து வைத்துள்ளார். மேலும் ஊரடங்கு காலம் என்பதால் தொகுதி மக்களுக்கு மளிகைப் பொருட்களையும் விநியோகம் செய்துள்ளார்.  

இப்படி கிராமத்துக்கு வருகை தந்த ரோஜாவுக்கு, மக்கள் வரிசையாக நின்று பாதங்களில் மலர் தூவி வரவேற்றுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூடியதற்கும், இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ரோஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement
Advertisement