This Article is From Mar 26, 2019

‘தேர்தல் முடிந்தவுடன் யானை வாங்கித் தருவேன்!’- அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி

சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார்

‘தேர்தல் முடிந்தவுடன் யானை வாங்கித் தருவேன்!’- அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி

அதிமுக-வின் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

அதிமுக-வின் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ‘நான் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால், திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு என் சொந்த செலவில் யானை வாங்கித் தருவேன்' என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் யானை இல்லை என்ற குறையை பக்தர்கள் என்னிடம் சொன்னார்கள். இதையடுத்து தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருடன் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும், தேர்தல் முடிந்த பிறகு ஆலயத்துக்கு எனது சொந்த செலவில் யானை வாங்கித் தருவதாக முடிவு செய்துள்ளேன். 

வளர்ந்து வரும் நகரமாக இருக்கும் திருவண்ணாமலை நகராட்சியை, மாநகராட்சியாக உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்' என்று கூறினார். 

சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். 
 

.