Read in English
This Article is From Jul 18, 2018

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம்… கட்டடத்துக்கு அரணான பெண்கள்!

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர்

Advertisement
நகரங்கள்
Chennai:

சென்னையில் இருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த மற்றும் அங்கு வேலை பார்த்து வந்த 17 பேரை கைது செய்துள்ளது காவல் துறை. இந்நிலையில், சிறுமி வசித்து வந்த கட்டடத்தில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளன. மேலும், அங்கு வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே கட்டட வாயிலில் பாதுகாப்புக்கு இருந்து வருகின்றனர். 

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் மகளிர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 17  பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

Advertisement

சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க, குற்றவாளிகளை கொண்டு செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் சார்பில் சங்கத்தைச் சேர்ந்த எந்த வழக்கறிஞரும் ஆஜராகமாட்டோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம், ‘பல வாரங்களாக அந்த பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது. அந்தக் குழந்தைக்கு முறையான உளவியல் சிகிச்சைத் தேவை’ என்று கோரிக்கை வைத்தார். 

இந்த வழக்கைப் பொறுத்தவரை 66 வயதான லிஃப்ட் ஆபரேட்டர் தான், முதல் முறையாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். அவர் தான், இதில் மற்றவர்களை ஈடுபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், சிறுமியை அடுக்குமாடி கட்டடத்தின் பல்வேறு இடங்களில் வைத்து 17 பேரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். அதை, வீடியோவாகவும் எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளனர். 

Advertisement

இதனால் பயந்த சிறுமி வெகு நாட்களுக்கு இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், சிறுமி அவரின் சகோதரியிடம் இந்த விஷயம் குறித்துக் கூற, அவர் தன் அம்மாவிடம் சொல்லியுள்ளார். பின்னர் தான், போலீஸில் புகார் அளிக்கப்பட்டு மொத்த சம்பவம் குறித்தும் வெளியே தெரியவந்தது. 

கட்டடத்தில் இருக்கும் பல சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை கொடுக்க 17 பேருக்கும் ஏதுவானதாக மாறியுள்ளது.

Advertisement


 

Advertisement