Read in English
This Article is From Oct 05, 2019

Drones: மும்பையை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் ட்ரோனில் மருந்துகள் விநியோகிக்க திட்டம்!

இந்த ட்ரோன் விநியோகத்தை சோதிக்கும் பைலட் திட்டத்திற்கான அடித்தளமாக மாறும் என்று உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Telangana Edited by

தெலுங்கானாவில் மருத்துவ வசதிகளுக்காக இனி ட்ரோன்களை பயன்படுத்தலாம். (Representational)

New Delhi:

தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சியில், தெலுங்கானா அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், மருந்து விநியோகத்திற்கு இனி ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான புதிய கட்டமைப்பை அமைக்க முயற்சித்து வருகிறது. 

உலக பொருளாதார மையம் (WEF) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை குழு நிறுவனமான ஹெல்த்நெட் குளோபல் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட, இந்த ட்ரோன் விநியோகத்தை சோதிக்கும் பைலட் திட்டத்திற்கான அடித்தளமாக மாறும் என்று உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உலக பொருளாதார மையத்தின் வான்வெளி மற்றும் ட்ரோன்களின் தலைவர் திமோதி ராய்ட்டர் கூறும்போது, இந்த புதிய கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், உயிர்களை காப்பாற்றக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கி தெலுங்கானாவை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது. ட்ரோன்களால் என்ன சவால்களை செய்ய முடியும், செயல்பாடுகளை எவ்வாறு மேற்பார்வையிடுவது மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை திட்டமிட்டமிட்டு வருகிறோம். இந்த திட்டத்தின் அடுத்த கட்டங்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம், ”என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement

ட்ரோன் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான முக்கிய காரணிகளையும், ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் தொழில்நுட்ப தேவைகளையும் இந்த கட்டமைப்பு கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்க சேவைகளை முடிந்தவரை திறமையாக பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும் மற்றும் குடிமை விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்கான தொடக்க புள்ளியாக இது செயல்படும்.

இது தொடர்பாக தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராமராவ் கூறும்போது, குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அரசு முன்னோடியாக உள்ளது. தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு இரத்தம் மற்றும் பிற மருத்துவ பொருட்களை வழங்க ட்ரோன்களைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த திட்டமாகும், இது சமூக நன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நிரூபிக்கிறது. என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement

அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் சங்கிதா ரெட்டி கூறுகையில், "இந்த ட்ரோன் திட்டத்தில் உலக பொருளாதார மையம் மற்றும் தெலுங்கானா அரசுடன் இணைந்து மருத்துவ பங்காளராக பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது தொலைதூர சுகாதாரப் பாதுகாப்புக்கான எங்கள் பயணத்தின் அடுத்த கட்டமாகும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement