Read in English
This Article is From Oct 16, 2018

கோவில், மசூதியை தொடர்ந்து குருத்வாராவிற்கு சென்ற ராகுல் காந்தி!

குருத்வாராவின் தலைமை குரு ராகுல் காந்திக்கு வாளினை பரிசளித்தார்

Advertisement
இந்தியா

ராகுல் காந்தியுடன் கமல் நாத் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உடன் இருந்தார்கள்.

Gwalior:

மத்திய பிரதேசத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று குவாலியரில் உள்ள குருத்வாராவிற்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து இன்று காலை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ராகுல் காந்தியுடன் கமல் நாத் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உடன் இருந்தார்கள். அவர்கள் மூவரும் தலைப்பாகை அணிந்து சென்றார்கள்.

அதன்பிறகு ராகுல் காந்தி மோரீனா மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி திங்களன்று இரவு மோட்டி மசூதியில் பிரார்த்தனை செய்தார்.

மேலும், பீதாம்பர பீத் கோவிலும் நேற்று பிரார்த்தனை செய்தார். மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர்.28ல் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


 

Advertisement