This Article is From Sep 18, 2020

வரும் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் ! முக்கிய முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு!!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
தமிழ்நாடு Posted by

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28-ல் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் இ.பி.எஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருமான முதலமைச்சரும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடைப்பெற்ற இக்கூட்டத்தை தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் இ.பி.எஸ் ஆகியோர் இணைத்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில்,” அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில், கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழக செயற்குழு உறுப்பினர்களுக்குத் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement