This Article is From Oct 02, 2018

கிரண் பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ… புதுச்சேரியில் பரபர!

அதிமுக-வைச் சேர்ந்த புதுச்சேரி எம்.எல்.ஏ அன்பழகன், அம்மாநில ஆளுநர் கிரண் பேடியுடன் பொது மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்

கிரண் பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ… புதுச்சேரியில் பரபர!

இந்த சம்பவம் குறித்தான வீடியோ, புதுச்சேரி வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது

Puducherry:

அதிமுக-வைச் சேர்ந்த புதுச்சேரி எம்.எல்.ஏ அன்பழகன், அம்மாநில ஆளுநர் கிரண் பேடியுடன் பொது மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ‘திறந்த வெளி மலம் கழித்தல்’ ஒழிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர்.

 

 

அப்போது எம்.எல்.ஏ அன்பழகன், மேடையில் உரை நிகழ்த்தினார். அங்கு வந்த கிரண்பேடி, அன்பழகனை நேரம் குறைவாக இருக்கிறது, நீங்கள் கிளம்பவும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் கோபம் கொண்ட எம்.எல்.ஏ, கிரண்பேடியை போகச் சொல்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. பிறகு எம்.எல்.ஏ, மேடையில் இருந்து சினத்துடன் இறங்கிச் செல்கிறார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியேகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கிரண் பேடி, ‘நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-வை இறங்கிப் போகம்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர் விடாப்பிடியாக மேடையிலேயே இருந்தார். இதைப் போன்ற சம்பவத்தில் அவர் முன்னரும் ஈடுபட்டுள்ளார்’ என்று எம்.எல்.ஏ மீது குற்றம் சாட்டியுள்ளார்.

.