சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மகள் ஆராத்யாக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமிதாப் மற்றும் அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் இது குறித்து தெரிவித்த டிவிட்டினை நீக்கியுள்ளார். எனவே இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் அறிவிக்கப்பட்வில்லை.
Advertisement
COMMENTS
Advertisement