Read in English
This Article is From Dec 11, 2018

''பாஜக தோற்பதை பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது'' - அஜித் ஜோகி மகிழ்ச்சி

சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா

பாஜகவுக்கு மாற்றும் காங்கிரஸ்தான் என மக்கள் உணர்ந்துள்ளதாக அஜித்ஜோகி தெரிவித்தார்.

Raipur:

பாஜக தோற்பதை பார்க்கும்போது ஆனந்தமாக இருப்பதாக சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கூறியுள்ளார்.

இங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 50-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இதுகுறித்து சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

பாஜக தோற்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. அதனை வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் விரும்பி விட்டனர். அதனால்தான் அக்கட்சி தோற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisement

இவ்வாறு அவர் கூறினார். அஜித் ஜோகி தனிக்கட்சி தொடங்கும் முன்பாக காங்கிரசில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement