Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 21, 2018

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி; சூட்கேஸில் கிடந்த சடலங்கள்

அலகாபாத்தில் சீலிங் ஃபேனில் தூக்குப்போட்டுக்கொண்ட கணவர்

Advertisement
நகரங்கள் (with inputs from ANI)
Allahabad:

அலகாபாத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் பூட்டிய வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணவர் தூக்குப்போட்டு இறந்திருக்க, அவரது மனைவியின் உடல் ஃப்ரிட்ஜில் இருந்தது. இரண்டு மகள்களின் உடல்கள் சூட்கேசிலும் அலமாரியிலும் மூன்றாவது மகளின் உடல் வேறொரு அறையிலும் கிடைத்துள்ளது.

“வீடு உள்பக்கமாகப் தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்துக்கொண்டுதான் செல்ல முடிந்தது. தூக்குப்போட்டுக்கொண்ட மனோஜ் குஷ்வாஹா என்னும் நபர் தனது மனைவியையும் மூன்று மகள்களையும் கொலை செய்துவிட்டு பின்பு தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று கருதுகிறோம். குடும்பப் பிரச்சினையாலோ தனது மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தாலோ இக்கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம்” என்று காவல்துறை அலுவலர் நிதின் திவாரி கூறினார்.

கடந்த மாதம், மதுரையில் ஒரு பெண் தனது இரு குழந்தைகளையும் பிளாஸ்டிக் பையில் கட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், தனது கணவர் குழந்தைகள் முன்பாக தன்னைத் தவறாகப் பேசி அசிங்கப்படுத்தியதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியிருந்தார்.

Advertisement

ஜூலை மாதம் ஜார்க்கண்டின் ஹசாரிபாகில் கடன் தொல்லையால் இதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்தனர்.

Advertisement