This Article is From Oct 25, 2019

எங்கள் நாட்டின் பாமாயிலை வாங்குங்கள் : மலேசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

“எங்கள் எங்கள் பாமாயில் வாங்க இந்தியாவுடன் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறோம்” என்று அமைச்சர் டேரல் லெய்கிங் கூறினார்.

எங்கள் நாட்டின் பாமாயிலை வாங்குங்கள் : மலேசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

மத்திய அரசின் முடிவு குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் ஐ.நா பொதுச் சபையில் விமர்சித்தார்

ஹைலைட்ஸ்

  • பாமாயில் மலேசியாவின் மிகப்பெரிய விவசாய ஏற்றுமதியாகும்.
  • மலேசிய பிரதம ஜம்மு &காஷ்மீர் குறித்து விமர்சித்தார்.
  • இந்திய வர்த்தக அமைப்புகள் மலேசியாவிடம் கொள்முதல் செய்வதை புறக்கணித்தன.
KUALA LUMPUR:

மலேசியாவின் மிகப்பெரிய விவசாய ஏற்றுமதி ஆகும். மலேசிய பாமாயிலை தொடர்ந்து வாங்குமாறு வலியுறுத்துவதற்காக மலேசிய இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  அதன் வர்த்தக அமைச்சர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

 “எங்கள் எங்கள் பாமாயில் வாங்க இந்தியாவுடன் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறோம்” என்று அமைச்சர் டேரல் லெய்கிங் கூறினார்.  

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்த மத்திய அரசின் முடிவு குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் ஐ.நா பொதுச் சபையில் விமர்சித்தார். அதன் பின் மும்பையில் உள்ள காய்கறி எண்ணெய் வர்த்தக அமைப்பு அதன் உறுப்பினர்களை மலேசியாவில் பாமாயில் வாங்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

.