Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 20, 2018

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Shopian encounter: ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் என்கவுன்ட்டர் நடைபெற்றது

Advertisement
இந்தியா (with inputs from Agencies)

Shopian encounter: இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார் எனத் தகவல்

Srinagar:

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் என்கவுன்ட்டர் நடைபெற்றது. இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் தரப்பில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பாதுகாப்புப் படையினருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகாம் கிராமத்தில் சிஆர்பிஎப், ராணுவத்தினர் மற்றுப் மாநில போலீஸ் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் தொடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீநகரின் ராணுவத் துறை செய்தித் தொடர்பாளர் கர்னர் ராஜேஷ் கலியா, ‘ஷோபியானின் நாடிகம் பகுதியில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement