நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கான விருதுகளையும் வென்றார். அதன் பின்னர் எந்த படஙக்ளிலும் நடிககவில்லை.
அண்மையில் தான் கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் வேலைக்கு செல்லும் முன் குணமடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் தன்னுடைய கவிதை தொகுப்பான முறிந்த சிறகு (Broken Wing) புத்தகத்தை வெளியிட்டார். பெங்களூரில் அவரின் கவிதை தொகுப்பிற்காக நடந்த கூட்டத்தில் பலரும் மனச்சோர்வை சொல்லும் கவிதைகளை குறிப்பிட்டு பேசினார்கள். அவரின் மன அழுத்தத்திற்கான காரணத்தையும் கேட்டார்கள்.
தான் திருமணமான ஆணுடன் உறவில் இருந்ததாகவும் அந்நபர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார். அவருக்கு கடுமையான மனச்சோர்வு இருப்பதை கண்டறிந்து அதிலிருந்து மீள, ஆயுர்வேத மருத்துவ முறையை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
கவிதை தொகுப்பான ப்ரோக்கன் விங்க்கின் அட்டைப் படத்தை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கவிதைகள் மூலம் தனிப்பட்ட உணர்வை பகிர்ந்து கொள்ள நிறைய தைரியம் தேவை என்று கூறியுள்ளார்.