This Article is From Jan 08, 2019

காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா நியமனம்!

அப்சரா ரெட்டி கடந்த 2016ல் அதிமுகவில் இணைந்தார்.

காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா நியமனம்!

ராகுல் காந்தியுடனான அப்சரா ரெட்டியின் புகைப்படத்தை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

New Delhi:

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை காங்கிரஸ் நியமித்துள்ளது. 134 வருட பழமையான கட்சியின் முதல் திருநங்கை நிர்வாகியாக அப்சரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, ராகுல் காந்தியுடனான அப்சரா ரெட்டியின் புகைப்படத்தை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 

முன்னாள் பத்திரிகையாளரான அப்சரா ரெட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுக கட்சி இரண்டாக பிரிந்ததையடுத்து, அப்சரா ரெட்டி சசிகலா கூட்டணியில் இணைந்தார்.

.