Read in English
This Article is From Jan 13, 2019

கடத்தல் மிரட்டல் எதிரொலி: கெஜ்ரிவால் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

Advertisement
இந்தியா

ஈ-மெய்ல் வழியே கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் வந்திருக்கிறது.

New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மகளை கடத்தப்போவதாக ஈ-மெய்ல் வழியே மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரது 23 வயது மகளான ஹர்ஷிதாவுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் விசாரணை நடத்தி வரும் போலீசார் மிரட்டல் ஈ-மெய்ல் அனுப்பியவரை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரையில் எவரும் சிக்கவில்லை.

டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ ஈ-மெய்லுக்கு கடந்த புதன் கிழமையன்று மெய்ல் வந்தது. அதில், ''உங்கள் மகளை நாங்கள் கடத்தப் போகிறோம். முடிந்தால் அவரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுனிதா என்ற மனைவியும், ஹர்ஷிதா என்ற மகளும், புல்கித் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் ஹர்ஷிதா மூத்தவர்.
 

Advertisement
Advertisement