Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 14, 2020

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்ற 3 நாட்ளானதை தொடர்ந்து, டெல்லியில் மையப்பகுதியான ராம் லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது.

New Delhi:


மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்ற 3 நாட்ளானதை தொடர்ந்து, டெல்லியில் மையப்பகுதியான ராம் லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். 

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கோபால் ராய் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், டெல்லியில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கு மற்ற மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக, தனது ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். 

இதற்காக டெல்லியில் உள்ள அனைவரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறோம் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா தெரிவித்திருந்தார். 

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

பாஜக ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், 2015 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அது கணிசமான தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியுள்ளது. பாஜகவின் பிளவுப்படுத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஆம் ஆத்மியும், எதிர்கட்சிகளும் பாராட்டியது. இதுபோன்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த கெஜ்ரிவால் மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 2013 வரை 15 வருடங்களாக டெல்லியை ஆண்டு வந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 

Advertisement

ஆம் ஆத்மி வெற்றி குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “புதிய ரகமான அரசியலுக்கு இந்த தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது. இது பாரத தாய்க்கு கிடைத்த வெற்றி” என்று கூறினார். மேலும், இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல. டெல்லி மக்களுடைய வெற்றி. என்னை மகனாக நினைத்த குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி. 24 மணிநேரமும் மின்சார வசதி பெற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி' என்று கூறினார். 
 

Advertisement