हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Jun 26, 2019

புதிய உளவுத்துறை இயக்குநராக அரவிந்த் குமார் நியமனம்!

அரவிந்த் குமார் மற்றும் சமந்த் கோயல் ஆகிய இருவரும், 1984ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர்.

Advertisement
இந்தியா Edited by

’ரா’ உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் பொறுப்பேற்கிறார்

New Delhi:

இரண்டு உளவுத்துறை அமைப்புகளுக்கும் புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதில், அரவிந்த் குமார் உளவுத்துறை இயக்குநராகவும், 'ரா' உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் பதவி வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரவிந்த் குமார் மற்றும் சமந்த் கோயல் ஆகிய இருவரும், 1984ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். 

உளவுத்துறை இயக்குநராக இருந்த ராஜீவ் ஜெயினுக்கு பதிலாக, அரவிந்த் குமாரும், 'ரா' உளவு அமைப்பின் தலைவராக இருந்த, அனில் தாஸ்மானாவுக்கு பதிலாக சமந்த் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement