This Article is From Oct 08, 2018

யானை சவாரியின் போது கீழே விழுந்த துணை சபாநாயகர்!

துணை சபாநாயகர் கீழே விழுந்து எழுந்ததும் அவருடன் இருந்தவர்களும் சேர்ந்து சரித்தனர்.

யானை சவாரியின் போது கீழே விழுந்த துணை சபாநாயகர்!

அசாம் துணை சபாநாயகர் கிரிபாநாத் மல்லா, யானை சவாரி செய்தபோது கீழே விழுந்தார்.

Ratabari, Assam:

பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற கூட்டத்திற்கான புதிய துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் கிரிபாநாத் மல்லா. இவர் தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில் யானை மீது சவாரி செய்தபடி வந்தபோது திடீரென கீழே வழுந்தார்.

அசாமின் ராட்டபரி பகுதி கிரிபாநாத்தின் தொகுதியாகும். தான் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது தொகுதி மக்களை சந்திக்க கடந்த சனிக்கிழமையன்று சென்றபோது ஆதரவாளர்களின் கட்டாயத்தினால் யானை மீது ஏறி சவாரி செய்துள்ளார். திடீரென யானை தனது சமநிலையை இழந்ததால் கிரிபாநாத் கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

 

துணை சபாநாயகர் கிரிபாநாத் மல்லா கீழே விழுந்து எழுந்ததை கண்டு அவருடன் இருந்தவர்களும் சேர்ந்து சரித்தனர்.

.