Read in English
This Article is From Feb 11, 2019

இன்ஸ்பெக்டர் அருகாமையிலேயே ஏடிஎம் திருட்டு...5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

போலீஸ் ரோந்து வாகனம் சுமார் 200 மீட்டர் அருகாமையில் இருக்கும் போது நடந்த இந்த கொள்ளையில் ரூ. 38 லட்சம் திருட்டு!

Advertisement
நகரங்கள்

காவல்துறை ஆய்வாளர் துர்கேஷ் குமார் மற்றும் நான்கு கான்ஸ்டேபிள்ஸ் இடைக்கால பணி நீக்கம்ம்

Mathura:

மதுராவில் போலீஸ் அதிகாரிகள் அருகாமையிலேயே ஏடிஎம் திருட்டு நடந்ததால் அவர்களை மேல்அதிகாரிகள் சஸ்பெண்டு செய்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த ஏடிஎம் திருட்டின்போது சுமார் 38 லாட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதைதொடர்ந்து அங்கு விசாரணை நடத்தப்பட்டதில் திருட்டு அரங்கேறியபோது சுமார் 200 மீட்டர் துரத்தில் காவல்துறையின் ரோந்து வாகனம் இருந்தது குறிப்பிடத்தக்கது என காவல்துறை அதிகாரி சத்யார்த் அனிருத்தா பன்கஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ‘துர்கேஷ் குமார் என்னும் காவல்துறை ஆய்வாளரும் உடன் இருந்த நான்கு கான்ஸ்டெபிள்ஸ் மொத்தம் ஐந்து பேரை இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என கூறினார். 

 

Advertisement