Read in English
This Article is From Nov 29, 2018

மிதக்கும் சிட்னி : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

"தெருவெங்கும் தேங்கியுள்ள தண்ணீர், பம்புகள் மூலம் அகற்றப்படுகிறது. இருப்பினும் தண்ணீரை இன்னும் முழுமையாக அகற்ற முடியவில்லை"

Advertisement
உலகம்

''8000 வீடுகளுக்கு மின் இணைப்பு சிட்னி நகரில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய கொஞ்சம் காலமெடுக்கும்" மின்சார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்

Sydney:

மக்கள் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயத்தில் சிட்னி நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக சிட்னி வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை அவதிக்குள்ளாகியுள்ளது. 

ஆஸ்க்ரிட் எனும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின்சார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ''8000 வீடுகளுக்கு மின் இணைப்பு சிட்னி நகரில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய கொஞ்சம் காலமெடுக்கும்" என்றார்.

"தெருவெங்கும் தேங்கியுள்ள தண்ணீர், பம்புகள் மூலம் அகற்றப்படுகிறது. இருப்பினும் தண்ணீரை இன்னும் முழுமையாக அகற்ற முடியவில்லை" என்று ஆஸ்திரேலிய கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

புயல் கடுமையாக வீசுவதால் விமான ஓடுதளத்தில் ஒரே ஒரு ஓடுதளத்தை தான் பயன்படுத்துகிறோம். அதனால் சில விமானங்கள் தாமதமாகவும், சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

மத்திய சிட்னி பகுதியில் 90 மில்லிமீட்டர் மழை பகுதியாகியுள்ளது. மாகண அவசர எண்ணுக்கு ஆயிரக்கணக்கில் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

Advertisement

இன்னும் 24 மணி நேரத்துக்கு பலத்த காற்றுடன் புயல் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement