Read in English
This Article is From Jul 20, 2018

ஆட்டோவில் கண்டெடுத்த 5 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீஸிடம் ஒப்படைத்த ஓட்டுநர்

ஆட்டோவில் பயணம் செய்த தம்பதியினர் விட்டுச் சென்ற 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொண்ட பையை போலீஸாரிடம் ஒப்படைதார் ஓட்டுநர்

Advertisement
நகரங்கள்
Thane:

தானே: நேர்மைக்கு முன்னுதாரணமாக, ஆட்டோவில் பயணம் செய்த தம்பதியினர் விட்டுச் சென்ற 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொண்ட பையை போலீஸாரிடம் ஒப்படைதார் ஓட்டுநர், என்று போலீஸார் தெரிவித்தனர்.

பிபின்பாயி படேல் நேற்று தனது ரிக்ஷாவில்  நகைகள் கொண்ட ஒரு பையை கண்டார். காலையில் ரிக்ஷாவில் ஏறிய தம்பதியினர் தான் அந்த பையை விட்டுவிட்டு இறங்கியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த, அவர் காசிமிராவில் உள்ள தானே கிராமப்புற குற்றப்பிரிவு காவல்துறையினரை அணுகினார்.

இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர்களான சுல்பிகர் லக்டவாலா மற்றும் ரச்னா லக்டவாலா தான் அந்த நகைகளின் உரிமையாளார்கள் என போலீஸார் கண்டுபிடித்து அவர்களிடம் நகை பையை ஒப்படைத்தனர். 

 

Advertisement
Advertisement