বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 18, 2019

அயோத்யா வழக்கு: மத்தியஸ்த குழுவின் நடவடிக்கை குறித்து இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நீதிமன்றம்!

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மூவர் குழுதான், அயோத்யா வழக்கில் மத்தியஸ்தம் செய்து வருகிறது

Advertisement
இந்தியா Edited by

அந்த குழுவில் ‘ஆர்ட் ஆஃப் லிவ்விங்’ அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மற்றும் மத்தியஸ்தம் செய்வதில் பெயர் போன ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இருக்கின்றனர்.

New Delhi:

அயோத்யா, நில விவகார வழக்கு தொடர்பாக ‘மத்தியஸ்த குழுவின் நடவடிக்கை' குறித்த அறிக்கையை ஆராய உள்ளது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை கடைசியாக ஜூலை 11 ஆம் தேதி விசாரித்தது. அப்போது, 18 ஆம் தேதி, மத்தியஸ்த குழு, தாங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஒரு வேளை மத்தியஸ்த குழுவின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருக்காது என்று தெரிந்தால், மீண்டும் வழக்கை விசாரிக்கும் முடிவுக்கு நீதிமன்றம் வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜூலை 25 முதல் வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மூவர் குழுதான், அயோத்யா வழக்கில் மத்தியஸ்தம் செய்து வருகிறது. அந்த குழுவில் ‘ஆர்ட் ஆஃப் லிவ்விங்' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மற்றும் மத்தியஸ்தம் செய்வதில் பெயர் போன ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இருக்கின்றனர். வழக்கில் மத்தியஸ்த குழு சுமூக தீர்வு காண, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மத்தியஸ்த குழு மூலம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவர், உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, தற்போதைய முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது. 

Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்யா. இங்குள்ள ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. அதன் பின்னர்தான் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

Advertisement
Advertisement