This Article is From Aug 22, 2018

தில்லியில் வங்கிக்கு வந்த நபரைத் தவறுதலாக சுட்ட பாதுகாவலர்

தெற்கு தில்லியில் ஒரு வங்கியில் வேலை செய்யும் பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டதால் ஒரு வாடிக்கையாளர் காயமடைந்தார்

தில்லியில் வங்கிக்கு வந்த நபரைத் தவறுதலாக சுட்ட பாதுகாவலர்
New Delhi:

புது தில்லி: தெற்கு தில்லியில் ஒரு வங்கியில் வேலை செய்யும் பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டதால் ஒரு வாடிக்கையாளர் காயமடைந்தார், என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

டிஃபன்ஸ் காலனியில் உள்ள விஜயா வங்கியில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

தவறுதலாகச் சுட்ட வங்கிப்பாதுகாவலர் ருத்ரபால் சிங் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி ஆவார். சுடப்பட்டவரின் பெயர் ராஜேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்போது தில்லி மூல்சந்த் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

டிஃபன்ஸ் காலனி காவல் நிலையத்துக்கு இது தொடர்பாக பிற்பகல் ஒன்றரை மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாவலர் பயன்படுத்திய தோட்டா போக, மீதமுள்ள ஐந்து தோட்டாக்களுடன் அவரது துப்பாக்கி சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை உதவி ஆணையர் ரோமில் பானியா தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர்.

 

.