This Article is From Dec 21, 2018

இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் ஸ்டிரைக்..!

பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கோரியும் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது

இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் ஸ்டிரைக்..!
New Delhi:

பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கோரியும் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள இந்த ஸ்டிரைக் காரணமாக, பொதுத் துறை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் தனியார் துறை வங்கிகள், இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை என்பதால், அதன் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது.

பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்டவை ஒரு குடையின் கீழ் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த 3 வங்கிகள் இணைப்பால், வேலையிழப்பு ஏற்படும் என்றும், தனியார் வங்கிகள் ஆதிக்கம் செலுத்த வழிவகையாக அமையும் என்றும் வங்கி சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஸ்டிரைக் குறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ரவிந்தர் குப்தா கூறுகையில், ‘வருவாயை கணக்கில் கொள்ளாமல், குறைந்தபட்ச சம்பளத்தை அனைத்து வங்கிகளும் உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம்' என்கிறார்.

அடுத்து வரும் நாட்களில் வங்கிகளின் ஸ்டிரைக் குறித்த விபரம்:

டிசம்பர் 21: வங்கி அதிகாரிகள் சங்கம் ஸ்டிரைக்

டிசம்பர் 22: நான்காவது சனிக்கிழமை விடுமுறை

டிசம்பர் 23: ஞாயிற்றுக் கிழமை விடுமுறை

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் விடுமுறை

டிசம்பர் 26: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்டிரைக்

.