Read in English
This Article is From Sep 22, 2018

"என் மகனை விட்டுவிடுங்கள்" - பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய காஷ்மீர் காவல் துறை அதிகாரியின் தாயார்

3 காவல் துறையினரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்

Advertisement
இந்தியா

தன் மகனை விட்டுவிடுமாறு பயங்கரவாதிகளிடம் காவல் துறை அதிகாரியின் தாயார் கெஞ்சியுள்ளார்

Srinagar:

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் இருந்த 3 காவல் துறையினரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள படாகுண்ட், கர்பான் ஆகிய கிராமங்களுக்கு நேற்று அதிகாலை வந்த பயங்கரவாதிகள் வீடு புகுந்து 3 காவல் துறையினரை கடத்திச் சென்றனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல் துறையைச் சேர்ந்த பிர்தவுஸ் அகமது, குல்வந்த் சிங், நிசார் அகமது ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

3 காவல் துறையினரை கடத்திய  பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்    

இந்நிலையில், கடத்தல் சம்பவம் நடந்த போது நிசார் அகமதுவின் தாயார் சைதா பேகம், காவல் துறை அதிகாரியை விட்டுவிடுமாறு பயங்கரவாதிகளிடம் கெஞ்சியுள்ளார். மேலும், காவல் துறை பணியில் இருந்து நிசார் அகமது ஓய்வு பெற உள்ளதால், அவரை விட்டுவிடுமாறும் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, காவல் துறை அதிகாரியை கடத்திச் சென்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement