த்ரோனின் இந்த ட்வீட்ஸ்களுக்கு மற்றும் நிர்வாணப் படங்கள் வெளியிட்டதற்கு தொடர்ந்து ஆதரவு குவிந்த வண்ணம் இருக்கின்றது.
ஹைலைட்ஸ்
- ட்விட்டரில் பதிவுகளை இட்டுள்ளார் பெல்லா த்ரோன்
- படங்கள் வெளியிட்டதற்குக் காரணங்களையும் தெரிவித்துள்ளார் த்ரோன்
- ஹாலிவுட் பிரபலம் இந்த பெல்லா த்ரோன்
New Delhi: ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின், ட்விட்டர் கணக்கை யாரோ சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை தானே வெளியிட்டுள்ளார் த்ரோன்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள த்ரோன், “எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிவீர்கள். ஹேக்கர், எனது நிர்வாணப் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்தார். நான் எடுத்த அந்த நிர்வாணப் படங்கள், ஒரு முக்கியமான நபருக்கானது.
என்னை ஹேக்கர் வெகு நேரமாக கட்டுப்படுத்தி வந்தான். இனி அவனால் அதைச் செய்ய முடியாது. நானே எனது படங்களை வெளியிடுகிறேன்.
என்னை இனி அந்த ஹேக்கர் கட்டுப்படுத்த முடியாது. நான்தான் எனது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் ஒரே நபர். உனக்கு ஒரு எச்சரிக்கை, எப்.பி.ஐ உன்னைத் தேடி சீக்கிரமே வரும். எச்சரிக்கையாக இரு” என்று கூறியுள்ளார். படங்களுடன், ஹேக்கருடன் தான் பேசிய பதிவுகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார் த்ரோன்.
த்ரோனின் இந்த ட்வீட்ஸ்களுக்கு மற்றும் நிர்வாணப் படங்கள் வெளியிட்டதற்கு தொடர்ந்து ஆதரவு குவிந்த வண்ணம் இருக்கின்றது.
Click for more
trending news