This Article is From Aug 29, 2019

காதல் மன்னன் 'கவின்', ஓ..ஓ..மேடி 'தர்சன்' -வில்லு பாட்டு பாடும் சாண்டி!

இன்றைய நாளான பிக் பாஸ் நிகழ்ச்சியில், லக்சரி பட்ஜெட் டாஸ்கின் பகுதியாக வில்லு பாட்டு கற்றுக்கொடுக்கப்பட்டது.

காதல் மன்னன் 'கவின்', ஓ..ஓ..மேடி 'தர்சன்' -வில்லு பாட்டு பாடும் சாண்டி!

Bigg Boss 3 Tamil, Sandy: வில்லு பாட்டு பாடும் சாண்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கின் நேற்றைய பகுதியாக கூத்து நிகழ்ச்சி எப்படி நடத்துவது என்பது பற்றி போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. டாஸ்க்கில் இரு அணிகளாக இருந்த போட்டியாளர்கள் கூத்து பயிற்சி எடுத்துக்கொண்டனர். பின் அன்றைய நாள் இரவில் இரண்டு அணிகளும் கூத்து நிகழ்ச்சியையும் அரங்கேற்றினர். முகென், வனிதா, சாண்டி, லாஸ்லியா ஆகியோரின் அணி சாலை விபத்து பற்றி ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்தியது. மறுபுறம் கவின், சேரன், தர்சன், செரின் ஆகியோரின் அணி, சென்னை மழை வெள்ளத்தை பற்றிய ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்தியது.

அதில் கவின் அணி, இந்த பிரச்னையில் மக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கேலி செய்திருந்து. இறுதியில் அந்த அணியே வெற்றி பெற்றது எனவும் அறிவிக்கப்பட்டது. கவினும் சேரனும் சிறப்பு பாராட்டுகளை பெற்றார்கள். இவர்கள் அணி ''ஏரிகளையும் குளங்களையும் நதிகளையும் நாம் பாதுகாக்காததால், இந்த நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது, இந்த நகரங்கள் கட்டிட குப்பைகளாக மாறி, நரகமாக மாறிவிட்டது" என்ற கருத்தை தெரிவித்தார்கள். பணத்திற்காக ஆட்சியாளர்கள், குளங்கள், ஆறுகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றிவிட்டார்கள் என்பதை எடுத்துறைத்தார்கள். அதை சிறப்பாக எடுத்துறைத்ததால், இவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் புதிதாக அறிமுகமான ஓப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போனை வைத்து ஒரு டாஸ்க் ஒன்றை அறிவித்தார் பிக் பாஸ். வனிதா, தர்சனை நடுவராக்கி மீதமிருப்பவர்களை 3 அணிகளாக பிரித்து, ஒவ்வொருத்தரும் இந்த ஸ்மார்ட்போனை கொண்டு 5 புகைப்படங்கள் எடுக்க வேண்டும். அந்த ஐந்து புகைப்படங்களை வைத்து ஒரு கதையை சொல்ல வேண்டும். லாஸ்லியா-சாண்டி, கவின்-செரின், சேரன்-முகென் என மூன்று அணிகள் பிரிக்கப்பட்டது. இதில் சேரன்-முகென் அணி சிறப்பாக கதை சொல்லி வெற்றியை கைப்பற்றினார்கள்.

இன்னிலையில், இன்றைய நாளான பிக் பாஸ் நிகழ்ச்சியில், லக்சரி பட்ஜெட் டாஸ்கின் பகுதியாக வில்லு பாட்டு கற்றுக்கொடுக்கப்பட்டது. அதில் வனிதா அணியின் சார்பில் சாண்டி பாட்டுப் பாடினார். சாண்டி என்றாலே கேலிதானே. அப்படிதான் இந்த வில்லுப்பாட்டும் ஆரம்பித்தது. பிக் பாஸ் வீட்டின் காதல் மன்னன் என தன் வில்லு பாட்டை ஆரம்பித்தார். உடனே அந்த காதல் மன்னன் யார் என்பது எனக்கு தெரியும் என கவின் பெயரை குறிப்பிட்டார். நானும் காதல் பண்ணுவேன், நீயும் காதல் பண்ணிருக்க, என சாண்டி சொல்ல, தூரத்தில் அமர்ந்திருந்த தர்சன் 'அவர் மட்டும்தான் நாளு பேரை காதல் பண்ணியிருக்கார்' என்று கத்த தன் வில்லுப்பாட்டை தொடர்ந்தார். மறுபுறத்தில் 'பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஓ..ஓ..மேடி' என தர்சன் பற்றிய பாடலை பாடினார். 'நம்ம தர்சனு, அவன் பின்னாடி சுத்துதப்பா பொண்ணு ஒன்னு, அது வேற யாரும் இல்ல நம்ம செரினு கண்ணு' என பாடல் பாடினார். 

அப்போ, இன்னைக்கும் வில்லு பாட்டோட விட்ல ஜாலி தானா!!!

.