Read in English
This Article is From Sep 18, 2019

Bigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்

Bigg Boss Tamil 3: லாஸ்லியாவோ தான் எப்படி விழுந்தேன் என்பதை மட்டும் பேசிக்கொண்டிருக்க ‘நான் சொல்றது உனக்கு புரியல’ கவின் சொல்கிறார். லாஸ்லியாவோ  ‘எனக்கு புரியிது’ என்று பேசிய படி விலகிச் சென்று விடுகிறார்

Advertisement
Entertainment Written by

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  தினமும் ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை ஒளிபரப்பி வருகிறார். நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான டாஸ்குகள் தொடங்கிவிட்டன.  

காலை தொடங்கியது. “காபி இப்படி போட்டுருக்க” என ஷெரினிடம் கவின் வம்பிழுக்கத் தொடங்கியிருந்தார்.  உன்னோட பேட் ஸைட கொண்டு வரணும் இல்ல… 80 நாள் ஆச்சி இன்னும் அது வெளியில வரவே இல்ல” என்று சொல்லி ஷெரினை வெறுப்பேற்ற தொடங்கி விட்டார். 

வெற்றி பெற்றால் என்ன பேசுவீர்கள் என்று கொடுத்த டாஸ்க்கிற்கு மற்றவர்களின் பேச்சைக் காட்டிலும் சேரனின் பேச்சு மட்டும் மிகவும் ஆணவமாக வெளிப்பட்டது.
கலர் கொட்டும் டாஸ்க்கில் அனைத்து கேள்விக்கும் யாரேனும் ஒருவர் கவினுக்குரிய பாட்டிலில் கலரை ஊற்றியபடி இருந்தார்கள். அதன்பின் நடந்த டாஸ்க்கில் முகேன் வெற்றி பெற்றாலும் கவினும் சிறப்பாக விளையாடினார். அதிசயமாக எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் சேரன் கவினை பாராட்டினார். 

லாஸ்லியா கவின் ‘விட்டுறாத' என சொல்ல, சொன்ன சில நொடிகளிலையே லாஸ்லியா பேலன்ஸ் தவறி  விளையாட்டிலிருந்து வெளியேறினார்.  அதன்பின் கவினும் வெளியேறினார்.  இரவு ‘உன்னை யாரு பேச சொன்னது' 

Advertisement

‘நீ பேசுனதுனாலத்தான் கவனம் சிதறியதாக' கவின் சொல்ல

லாஸ்லியாவோ தான் எப்படி விழுந்தேன் என்பதை மட்டும் பேசிக்கொண்டிருக்க ‘நான் சொல்றது உனக்கு புரியல' கவின் சொல்கிறார். லாஸ்லியாவோ  ‘எனக்கு புரியிது' என்று பேசிய படி விலகிச் சென்று விடுகிறார். இப்படியாக ஒரு நாளை ஷெரினிடம் வம்பிழுக்கத் தொடங்கி லாஸ்லியாவிடம் புகார் சொல்லிபடி  நாள் முடிந்தது.

Advertisement

Advertisement