This Article is From Aug 01, 2019

'என்னை வீட்டிற்குள் அனுப்பிவைத்தது விஜய் சேதுபதி சார்தான்' - சேரன்!

பிக் பாஸ் வீட்டில் நேற்று 'மொட்ட கடுதாசி' என்று ஒரு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது.

'என்னை வீட்டிற்குள் அனுப்பிவைத்தது விஜய் சேதுபதி சார்தான்' - சேரன்!

முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க், பிக் பாஸ் வீட்டில் 38வது நாளான நேற்று முடிவடைந்தது. அந்த டாஸ்க் முடிந்தபின், 'மொட்ட கடுதாசி' என்று ஒரு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. தங்கள் பெயரை குறிப்பிடாமல் வீட்டில் உள்ளவர்கள், மற்ற ஏதாவது இரண்டு நபர்களிடம் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த டாஸ்க். 

அந்த டாஸ்க்கில் சேரனை நோக்கி தன் கேள்வியை முன்வைத்த சரவணன், "நீங்கள் சினிமா துறையில் நுழைந்ததிலிருந்தே நல்ல பெயரையும் புகழையும் விருதுகளையும் பெற்றுவிட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதைவிடவா, பெயரையும் புகழையும் பெற்றுவிடப்போகிறீர்கள். இது எதை நோக்கிய பயணம்?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் சேரன்,"சினிமா துறையில் நுழைந்ததிலிருந்து பல பெயரையும் புகழையும் பெற்றது உண்மைதான். ஆனால், அந்த புகழை அவ்வளவு சுலபமாக பெற்றிடவில்லை. அதே நேரத்தில், அதை காப்பாத்திக் கொள்வதற்கான போராட்டம் என்பது பெரிதாக இருந்தது. ஆட்டோகிராபின் வெற்றிதான் நான் கடைசியாக அனுபவித்த மிகப்பெரிய வெற்றி, அதற்கடுத்து மிகப்பெரிய போராட்டத்திற்கு நடுவில்தான் சினிமா பண்ணிட்டு இருந்தேன். அந்த இடத்தை விட்டு நான் பொயிறவும் முடியாது, எனக்கு சினிமாவை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது." என தன் சினிமா வாழ்க்கையை விவரித்தார்.

அப்போது,"விஜய் சேதுபதிதான் 'இந்த எடத்துக்கு போங்க' என்று என்னை இங்க அனுப்பி வச்சார்." என்று சேரன் குறிப்பிட்டார். "சார் நம்ம வந்து நாளு வருசம் கேப் விட்டுட்டோம். ஒன்னு, இப்போ உள்ள அடுத்த தலைமுறைக்கு உங்களை தெரியனும். ரெண்டு, எல்லா கிராமங்களையும் மக்கள் இந்த பிக் பாஸ் பாக்குறாங்க. நீங்க 35 வருசம் விழுந்து எந்திரிச்சு, விழுந்து எந்திருச்சு வந்த அத்தனை அனுபவமும் அவங்களுக்கு பாடம்" என விஜய் சேதுபதி கூறி பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை அனுப்பி வைத்ததாக சேரன் குறிப்பிட்டார்.

.